சென்னையில் பிடிபட்ட அல்ஜீரிய நபர் விடுதலை-இன்டர்போல் நடவடிக்கை
சென்னை: அல்ஜீரியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த 17 ஆண்டுகளாக இன்டர்போல் அமைப்பால் தேடப்பட்டு, சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட தொழிலதிபர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 18ம் தேதி மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய சலீம் அப்பாசி (42) குடியுரிமைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக இன்டர்போல் அலெர்ட் இருந்ததால் இந்த நடவடிக்கையை குடியுரிமைப் பிரிவினர் எடுத்தனர்.
ஆனால், அல்ஜீரியாவில் தனது தந்தை அரசியல் தலைவராக உள்ளதாகவும், அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக தனது குடும்பத்தினர் மீது அல்ஜீரிய அரசு குண்டுவெடிப்பு வழக்கைப் போட்டதாகவும், இதனால் கத்தார் நாட்டுக்கு குடிபெயர்ந்து நெடுங்காலம் ஆகிவிட்டதாகவும் அப்பாசி கூறினார்.
மேலும் இப்போது சூரிய சக்தியால் மின்சாரம் தயாரிக்கும் தொழில் நடத்தி வருவதாகவும், கர்நாடக அரசுக்கு இது தொடர்பான ஆலோசனை வழங்கவே இந்தியா வந்ததாகவும், தான்
தீவிரவாதியோ, குற்றவாளியோ கிடையாது என்றும் கூறினார்.
ஆனாலும் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. அதிகாரிகளும் இவரிடம் விசாரணை நடத்திவிட்டு இன்டர்போலுக்கு தகவல் தந்தனர்.
இன்டர்போல் போலீசார் அல்ஜீரிய நாட்டுக்கு தகவல் தந்தனர். ஆனால் தற்போது விசாரணைக்கு அப்பாசி தேவையில்லை என்று அல்ஜீரிய அரசு அறிவித்துவிட்டது.
இதையடுத்து அவர் மீதான ரெட் கார்னர் நோட்டீஸை இன்டர்போல் வாபஸ் பெறுவதாக அறிவித்து இது தொடர்பான உத்தரவை ஐ.பிக்கு அனுப்பியது. அவர்கள் தமிழக போலீசாருக்கு தகவல் தந்து அப்பாசியை விடுவிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து தாம்பரம் நீதிமன்றத்தில் அப்பாசி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் இவர் விசாரணைக்கு தேவையில்லை என்று அல்ஜீரியா நாட்டு போலீசாரும் இன்டர்போலும் தெரிவித்துவிட்டதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அப்பாசியை உடனடியாக விடுதலை செய்ய மாஜிஸ்திரேட் சரவணன் உத்தரவிட்டார்.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications