Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியனைவிட சிங்களனே மேல்-திருமா ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வணங்காமன் கப்பலை வெளியேற்றிய இந்திய அரசின் செயல் கண்டனத்துக்குரியது. இந்திய அரசின் கொடூர செயல் 'இந்தியனைவிட சிங்களனே மேல்' என கூறும் அளவுக்கு உள்ளது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வன்னியில் வதை முகாம்களில் சிக்கி சிதைந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கடந்த மாதம் சுமார் 884 டன் எடை கொண்ட உணவு மற்றும் மருந்து பொருட்களை கேப்டன் அலி என்ற வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்த கப்பலை ஈவு இரக்கம் இல்லாத சிங்கள இனவெறியர்கள் அனுமதிக்கவில்லை. இரண்டு மாதமாக அந்த கப்பல் ஓர் அகதியை போல நடுக்கடலில் தத்தளிக்கிறது. தவிக்கிறது. அதில் பணியாற்றும் ஊழியர்கள் நோய்வாய் பட்டு சிகிச்சை பெற வழியின்றி துயரப்படுகின்றனர்.

இந்த பொருட்களை சென்னை துறைமுகத்தில் அனுமதி அளிக்காமல் இந்திய அரசு ஈரம் இல்லாத அரக்கத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. அதை விடுதலை சிறுத்தைகளிடம் ஒப்படைத்து, தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகளுக்கு கொடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் முயற்சிகள் மேற்கொண்டது.

ஆனால், அதிகாரிகள் அந்த கப்பலை வெளியேறும்படி எச்சரித்துள்ளனர். இந்திய அரசின் கொடூர போக்கு இந்தியனைவிட சிங்களனே மேல் என கூறும் அளவுக்கு உள்ளது. இந்திய அரசின் தமிழின விரோத, மனித நேயமற்ற போக்கை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் திருமாவளவன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+