வினாடிக்கு ஒரு பைசா கட்டணம்: டாடா அறிமுகம்
பொதுவாக செல்போனில் பேசும்போது நிமிடத்தை அடிப்படையாக வைத்தே கட்டணம் வசூலிப்பார்கள். இந்த நிலையில் முதல்முறையாக வினாடியைக் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்.
பத்து வினாடிகள் மட்டும் பேசினால் 10 பைசா மட்டுமே இதில் கணக்கிடப்படும். இந்த வசதிக்கு டாடா டோகோமோ என்று பெயரிட்டுள்ளது டாடா டெலிசர்வீஸஸ்.
லோக்கல், எஸ்டிடி என்ற பேதமில்லாமல் இதில் வினாடிக்கு ஒரு பைசா மட்டுமே வசூலிக்கப்படும். ஏற்கெனவே இந்தியாவின் சில பகுதிகளில் அறிமுகமாகிவிட்ட இந்த வசதியை முதல்முறையாக தமிகத்திலும் நேற்று டாடா டெலிசர்வீஸஸ் அறிமுகப்படுத்தியது.
அடுத்த இரு வாரங்களுக்குள் தென்மாநிலங்கள் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும், இப்போது ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம், விரைவில் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் டாடா டெலிசர்வீஸஸ் தெரிவித்துள்ளது.