வரதட்சணை-திருமணத்துக்கு முதல் நாள் பெண் தற்கொலை
சென்னை: மாப்பிள்ளை வீட்டார் திடீரென கூடுதல் வரதட்சணை பணம் கேட்டதால் கவலை அடைந்த மணமகள் கல்யாணத்திற்கு முதல் நாளன்று தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த கொட்டி வாக்கத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது 2வது மகள் சித்ரா. சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர் மோகனுக்கும், அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இதைப் பார்த்த சித்ராவின் பெற்றோர் இருவருக்கும் கல்யாணம் செய்ய தீர்மானித்தனர். மோகனின் குடும்பத்தினரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குமார் திடீரென உடல் நலக்குறைவால் இறந்து போனார். மோகனுக்கும் அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. மோகனைப் போல ஆசிரியையாக வேண்டும் என்று விரும்பி பி.எட் படித்து வந்த சித்ராவும் படிப்பை முடித்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரின் திருமணமும் இன்று நடப்பதாக இருந்தது. இந்த நிலையி்ல் நேற்று திடீரென சித்ரா தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களிடம் சித்ராவின் தாயார் சுந்தரி புகார் கொடுத்தார். அதில், அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணியில் மோகன் சேர்ந்த பின், கூடுதலாக பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால், எனது மகள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications