சென்னை மெரீனாவில் திடீரென உள்வாங்கிய கடல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கடற்கரையில் நேற்று திடீரென கடல் உள் வாங்கியது. இதனால் பெரும் பீதி பரவியது.
சென்னை கடல் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் கடல் கொந்தளிப்பு நிலி வருகிறது. இதனால் பட்டினப்பாக்கம் பகுதியில் 50 வீடுகளும் ஒரு தேவாலயமும் சேதமடைந்துள்ளன. கடற்கரைக்கும், குடியிருப்புகளுக்கும் இடையிலான தூரம் பெருமளவு சுருங்கிவிட்டது.
இந் நிலையில் நேற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. மாலை 4.30 மணியளவில் திடீரென மெரீனா பகுதியில் சுமார் 15 அடி தூரம் வரை கடல் உள் வாங்கியது.
இதனால் அப் பகுதியில் மீனவர்கள் அச்சமடைந்தனர். கடற்கரையில் இருந்த பொது மக்களையும் எச்சரித்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.
அரை மணி நேரத்துக்குப் பின் கடல் பழைய நிலைக்கே திரும்பியது.












Click it and Unblock the Notifications