காங்கிரசிலிருந்து மாஜி முதல்வர் ரங்கசாமி நீக்கம்

புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் அவரை ராஜினாமா செய்ய வைத்தது கட்சித் தலைமை. இதையடுத்து வைத்திலிங்கம் முதல்வரனார்.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் வந்தது. ஆனால், ரங்கசாமி பிரச்சாரத்துக்கு வரவில்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமிக்கு எதிராக மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ரங்கசாமி. ஆனாலும் நாராயணசாமி வெற்றி பெற்று மீண்டும் மத்திய அமைச்சரும் ஆகிவிட்டார்.
இதையடுத்து ரங்கசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நராயணசாமியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கட்சித் தலையிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைமையின் உத்தரவுப்படி ரங்கசாமிக்கும் அவரது ஆதரவாளர்களான 9 நிர்வாகிகளுக்கும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையே இன்று அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications