காவிரியில் தமிழகத்துக்கு நீர் திறப்பு இல்லை-கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காவிரி பாசனப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் இப்போதைக்கு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று அம் மாநில முதல்வர் எதியூரப்பா கூறினார்.

காவிரி நீர்ப்பாசன கழகம், கர்நாடக நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை இன்னும் பெய்யவில்லை. இதனால் காவிரிப் பாசனப் பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக்கட்டுகளில் நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குடிநீர்ப் பிரச்னையை சமாளிப்பதே கஷ்டமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தற்போது காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை. நல்ல மழை பெய்து அணைக்கட்டுகள் நிரம்பும் நிலை ஏற்படும்போது தமிழகத்துக்கு எப்போதும்போல் தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்தப் பிரச்னையில் கர்நாடகத்தின் நலனை அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. அதுபோன்ற ஒரு முடிவை அரசு எடுக்காது. அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லை, இதனால் தமிழகத்துக்குத் தண்ணீர் விடவில்லை என்றார்.

தமிழகம் வலியுறுத்தவில்லை...

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை,

தண்ணீரைத் திறந்துவிடும்படி தமிழக அரசிடமிருந்து கர்நாடகத்துக்கு கடிதம் ஏதும் வரவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை.

காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமும் இல்லை. ஜூலையில் நல்ல மழை பெய்தால் குறிப்பிட்டபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

தமிழகம் வலியுறுத்தவில்லை...

இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை,

தண்ணீரைத் திறந்துவிடும்படி தமிழக அரசிடமிருந்து கர்நாடகத்துக்கு கடிதம் ஏதும் வரவில்லை. தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை.

காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமும் இல்லை. ஜூலையில் நல்ல மழை பெய்தால் குறிப்பிட்டபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.

வறளும் மேட்டூர்..கவலையி்ல் விவசாயிகள்:

இதற்கிடையே மேட்டூ்ர் அணையின் நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஜூலையில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கான நீர் திறந்து விடுவது சந்தேகமாகியுள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+