Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை-மதுரை-திருச்சி: ரூ1000 கோடியி்ல் சாலைகள்

Subscribe to Oneindia Tamil

Highway
சென்னை: சென்னையில் அதி விரைவு ரிங் ரோடு அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக துணை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.

உள்ளாட்சி்த் துறை தொடர்பான கொள்கை குறிப்புகளை தாக்கல் செய்து அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேர் நகர்ப் பகுதிகளில் வசிக்கிறார்கள். எனவே நகரங்களில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இந்த அரசின் முக்கிய குறிக்கோளாகும்.

வரும் 20 ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து நகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை படிப்படியாக செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை தங்க சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க ரூ.26 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. டர்ன்புல்ஸ் சாலை- செனடாப் சாலை சந்திப்பில் கட்டப்படும் மேம்பாலம் பணி டிசம்பர் மாதம் முடிவடையும். வட சென்னையில் கணேசபுரம் ரயில்வே சுரங்கப் பாதை மீது ரூ.61 கோடியில் மேம்பலம் கட்டப்படும்.

தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையை நவீனப்படுத்த ரூ.13 கோடியில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கில் நடைபாதை ஓரங்களில் கருங்கல் தூண்களுடன் துருப் பிடிக்காத ஸ்டீல் பைப்புகளால் ஆன கைப்பிடிகள் அமைக்கப்படுகின்றன.

கடற்கரை பகுதியில் பொதுமக்கள் அமர அழகான மேடைகள், பூங்காக்கள் ரூ.28 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகின்றன. ரிசர்வ் வங்கி சுரங்கப் பாதை பகுதியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை மெரீனா கடற்கரையை உள்ளடக்கிய பகுதியில் பெரிய அளவில் அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

சென்னையில் அதி விரைவு சுற்று வட்ட போக்குவரத்து பாதை அமைக்க திட்டறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை 2012க்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்படும் நிலையில் உள்ளன.

களப்பணி வேலைகள் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு அலுவலகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் கடந்த 11ம் தேதி துவக்கி வைக்கப் பட்டது. இத் திட்டத்தின் 2ம் கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும்.

நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உலகத் தரத்துடனான சாலைகள் அமைக்க ரூ. 1,000 கோடியி்ல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் முதல் கட்டமாக சென்னை, மதுரை, திருச்சியில் அமலாக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+