தொடரும் சித்த மருத்துவ மாணவர்கள் போராட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் 12வது நாளாக முகத்தில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் இயங்கி வரும் மூலிகை ஆராய்ச்சி பிரிவு மையத்தை சேலம் தனியார் கல்லூரிக்கும், சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவை தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழககத்திற்கும் மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவக்க வலியுறுத்தியும் பாளைங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், மாணவ, மாணவிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்புத்துணி கட்டி 12வது நாளாக மாணவ, மாணவியர்கள் இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.