ஜாக்சன் மரணத்தில் சந்தேகம் இல்லை - தடயவியல் நிபுணர்கள்

மைக்கேல் ஜாக்சனின் உடலில் தடயவியல் சோதனைகளை மேற்கொண்ட நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிரேக் ஹார்வி இதுகுறித்துக் கூறுகையில், ஜாக்சனின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. வெளிக் காரணிகளால் அவரது மரணமும் நேரவில்லை.
அவரது உடலில் 'அட்டாப்சி' முடிந்து விட்டது. மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஜாக்சனின் உடலில் டாக்சிகாலஜி உள்ளிட்ட மேலும் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவையெல்லாம் முடிந்த பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.
இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் இவற்றின் முடிவு தெரிய வரும்.
இருப்பினும் ஜாக்சனின் மரணத்தில் எந்தவித மர்மமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஜாக்சன் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே உட்கொண்டு வந்துள்ளார் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
ஜாக்சன் உடல் இறுதிச் சடங்குக்குத் தயாராக உள்ளது என்றார் ஹார்வி.
ஓவர் டோஸ் மாத்திரைகள், மருந்துகளால்தான் ஜாக்சன் இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையி்ல் தடயவியல் நிபுணர்களின் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications