கூலிப்படை, கட்டப்பஞ்சாயத்து அட்டகாசத்தை ஒழித்தக் கட்ட கருணாநிதி உத்தரவு
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து உயர் காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
இதில் டிஜிபி ஜெயின் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி,, உள்துறை செயலாளர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களிடையே முதல்வர் பேசுகையில், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திருப்திகரமாக உள்ளது. ஒரு சில இடங்களில் குற்றங்கள் நடக்கிறது. அதன்மீது தீர விசாரணை நடத்தி உறுதியான நடவடிக்கை எடுங்கள்.
கூலிப்படையினரின் வன்முறை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட புகார்கள் மீது எந்தவித பாகுபாடுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications