தீண்டாமை ஒழிப்பு-பெருமாம்பட்டி கிரமாத்துக்கு ரூ. 1 லட்சம்
சேலம்: தீண்டாமைக்கு குட்பை சொல்லி, சமுதாய நல்லிணக்கத்துடன் சிறந்து விளங்கும் பெருமாம்பட்டி கிராமத்துக்கு தமிழக அரது அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தீண்டாமை ஒழிக்க பாடுபட்டு, சமுதாய நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்தை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள பெருமாம்பட்டி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு சார்பில் அக்கிராம வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை பெருமாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் குப்பனிடம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் வழங்கினார்.
அப்போது கலெக்டர் சந்திரகுமார் கூறுகையில்,
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் அதிகம் வாழும் கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் சிறந்து வாழும் கிராமத்தை தேர்வு செய்து பரிசு வழங்கி வருகின்றது.
அதன்படி, பெருமாம்பட்டி கிராமத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை அந்த கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
நல்லிணக்கத்துடன் சிறந்து வாழும் பெருமாம்பட்டி கிராம மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.