தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் சாலை பாதுகாப்பு வரி

சாலை விபத்துக்களில் உயிரிழப்போருக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவதற்காக இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்படவுள்ளது.
தற்போது சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடாக, ரூ. 10,000ம் முதல் ரூ. 25,000 வரை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இரு சக்கர வாகனங்களுக்கு சாலை பாதுகாப்பு வரி ரூ. 250 ஆக இருக்கும். இலகு ரக வாகனங்களுக்கு ரூ. 1,500ம், கனரக வாகனங்களுக்கு ரூ. 2,000மும் பாதுகாப்பு வரியாக வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் தினசரி சராசரியாக 3,815 வாகனங்கள் பதிவாகின்றன. சென்னையில் மட்டும் 1,900 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் 70 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும்.
தமிழக அரசு புதிதாக 3,500 பேருந்துகளை வாங்கவுள்ளது. தமிழக அரசின் 7 போக்குவரத்து கழகங்களும் இந்த பேருந்துகளை வாங்கும்.
மத்திய அரசு நிதி மற்றும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை நிதிக் கழகத்தின் நிதியுதவியுடன் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
தமிழக அரசின் ஏழு போக்குவரத்துக் கழகங்களும் கடந்த நிதியாண்டில் ரூ. 710.14 கோடி நஷ்டத்தை சந்தித்தன. ஆனால் ஒரு ஆண்டுக்கு முன்பு இது ரூ. 379.57 கோடியாக மட்டுமே இருந்தது. என்றார் நேரு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications