வட மாநிலங்களில் பெய்யத் தொடங்கியது மழை
டெல்லி: கடும் வெயிலில் சுருண்டு கொண்டிருக்கும் வட மாநிலங்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அங்கு நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
டெல்லி, பீகார், ஹரியானா, பஞ்சாப், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
பீகாரில் நேற்று முதலில் மழை பெய்யத் தொடங்கியது. அப்படியே வட மாநிலங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
இது பருவ மழையின் தொடக்கம் என வானிலை மையத் தகவல்கள் கூறுகின்றன.
கடும் வெயிலில் சுருண்டு கொண்டிருந்த தலைநகர் டெல்லியில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல பீகாரில் நேற்று பிற்பகலுக்கு மேல் கன மழை பெய்தது. இதனால் தலைநகர் பாட்னாவில் பல இடங்கள் வெள்ளக்காடானாது.
பீகாரின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நல்ல மழை பெய்யும் என்று பீகார் வானிலை ஆய்வ மைய அதிகாரி லஷ்கர் தெரிவித்தார்.
இதேபோல ஜார்க்கண்ட், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் மழை பெய்துள்ளது.
மழை உரிய காலத்தி்ல பெய்யத் தவறியதால் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் கடும் வறட்சியில் மூழ்கின. டெல்லியில் மின்பற்றாக்குறையும் சேர்ந்து கொண்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications