For Daily Alerts
Just In
ஜூலை 1ல் சென்னையில் என்.எஸ்.ஜி. மையம் தொடக்கம்
சென்னை: தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) மையம் ஜூலை 1ம் தேதி சென்னையில் தொடங்கப்படுகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பெருநகரங்களில் என்.எஸ்.ஜி. மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த நகரங்களில் சென்னையும் ஒன்று.
சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் என்.எஸ்.ஜி. மையம் அமைகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
இங்கு நிரந்தரமாக கட்டடங்கள் கட்டப்படும் வரை அசோக்நகர் போலீஸ் பயிற்சி அகாடமியில் தேசிய பாதுகாப்பு படை செயல்படும்.
ஏற்கனவே ஷர்மா என்ற கர்னல் தலைமையில் 250 வீரர்கள் வந்து விட்டனர். ஜூலை 1ம் தேதி முறைப்படி இந்தப் படைப்பிரிவு மையம் தொடங்கி வைக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு chennai சென்னை என்எஸ்ஜி பாதுகாப்பு தொடக்கம் campaign முகாம் tamilnadu pchidambaram பசிதம்பரம்
Story first published: Monday, June 29, 2009, 9:13 [IST]