For Daily Alerts
Just In
194 தமிழ் அகதிகளுடன் படகு-ஆஸி கடற்படை பிடித்தது
கிறிஸ்துமஸ் தீவு: 194 அகதிகளுடன் சென்ற படகு ஒன்றை ஆஸ்திரேலியக் கடற்படை பிடித்துள்ளது.
இலங்கையில் போர் ஓய்ந்தாலும் கூட அங்கு தமிழர்களுக்கு சாதகமான நிலை இல்லாத காரணத்தால் தமிழ் மக்கள் அகதிகளாக தொடர்ந்து இடம் பெயர்ந்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் 194 பேருடன் வந்த படகு ஒன்றை ஆஸ்திரேலிய கடற்படை மடக்கிப் பிடித்தது.
அதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று சந்தேகப்படுவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பிரன்டன் கோனர் தெரிவித்துள்ளார்.
படகில் பெண்கள் யாரும் இல்லை எனவும் அனைவரும் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஆஸ்திரேலியாவை நோக்கி தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் வந்த படகுகளின் எண்ணிக்கை இத்துடன் 15 ஆக உயர்ந்துள்ளது.
Comments
Story first published: Monday, June 29, 2009, 11:45 [IST]