தமிழர்களுக்கு சோறு மட்டும் போதாதா?-சிங்கள கட்சி தலைவரின் திமிர் பேச்சு
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அரசு இதனை செய்தால் அரசிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டி வரும்.
13 ஆவது திருத்தச் சட்டம் நாட்டிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அது முழுமையாக அமுல்படுத்தப்படாமல் உள்ளதால் தான் நாடு இதுவரை மோசமான பாதிப்புகளிலிருந்து தப்பியுள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதையும் எதிர்க்கிறோம்.
தமிழ் மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சமூக கௌரவத்தைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.
இலங்கை போன்ற சிறிய நாடு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தேவையற்ற பொருளாதாரச் செலவுகளையே எதிர்கொள்ள வேண்டிவரும் என்றார் அவர்.
உண்மையில், 13வது சட்டத் திருத்தமே தமிழர்களின் உரிமைகளை முழுமையாக பறிக்கும் வகையி்ல் இருக்கிறது என்பதால் அந்த சட்டத் திருத்தத்தையே தமிழர்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் எதிர்த்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.