கடலில் மீனவர்கள் பயங்கரம மோதல்-ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடுக் கடலில் இரு பிரிவு மீனவர்களிடையே பயங்கர மோதல் மூண்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சென்னை அருகே நடந்துள்ள இந்த சம்பவத்தால் கோவளம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கோவளம் அருகே உள்ள மீனவக் குப்பத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் தனித் தனியாக மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது நடுக் கடலில் வைத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக கோவளம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications