போலீசுக்கு 'குடிமகன்கள்' அடி-உதை!-காத்த மக்கள்!!
சிவகங்கை: சிவகங்கை அருகே குடிகாரர்களிடம் சிக்கி கொண்ட போலீசாரை பொது மக்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேவுகப் பெருமாள் கோயில். இந்த கோயில் மண்டபத்தில் மதுரை சேக்கிப்பட்டியை சேர்ந்த சிலர் ஆடு வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அப்போது அவர்களில் சிலர் நன்றாக குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள பெண்கள் பள்ளி உள்ள அருகே நின்று தங்களுக்கு ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இந்த சமயத்தில் அந்த பக்காமக வந்த போலீஸ்காரர் குணசேகர் என்பவர் அந்த குடிகாரர்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை தாக்கியது.
இதையடுத்து அங்கிருந்து ஓடிய அந்த போலீஸ்காரர், இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சீராளன் மற்றும் இரண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போதையில் இருந்தவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் இன்ஸ்பெக்டரையும் அவருடன் போலீசாரையும் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டரின் சட்டை கிழிந்தது.
இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த பொது மக்கள் ஓடி வந்து போலீசாரை காப்பாற்றினர். சேக்கிப்பட்டியை சேர்ந்த சேவுகமூர்த்தி, மணி, முருகன், பாண்டி, ராஜேந்திரன் உள்ளிட்ட ஒன்பது பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொது மக்களை காக்க வேண்டிய போலீசை, பொது மக்கள் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications