For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி-கொழும்பு கப்பலுக்கு வாய்ப்பில்லை-வாசன்

By Staff
Google Oneindia Tamil News

Vasan
தூத்துக்குடி: தற்போதைய சூழ்நிலையில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புவுக்கு கப்பல் போக்குவரத்து துவக்க சாத்தியமில்லை மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முதலாக தூத்துக்குடி வந்த வந்த அவர் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்தார்.

பி்ன்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 2015ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன்களாக அதிகரிக்கப்படும். அதற்கேற்க வகையில் துறைமுகம் விரிவுபடுத்தப்படும்.

துறைமுகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டம் மிக முக்கியமான திட்டம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக அடித்தளமான திட்டம். இத் திட்டத்திற்கான தடைகளை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு திட்டம் அமலாக்கப்படும்.

கடல்சார் தேசிய வாரியம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு மட்டும் ரூ. 4571 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தத் துறைமுகம் விரிவுபடுத்தப்படுவதோடு அதைச் சார்ந்த பிற துறைகளின் வளர்ச்சிக்கும் உதவிகள் வழங்கப்படும்.

இதன் ஒரு பகுதியாக 8வது தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றும் பணி, 9வது கப்பல் தளம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வரும் 2011ம் ஆண்டு முடிவடையும்.

தூத்துக்குடி துறைமுகத்தை சென்னை மற்றும் பெங்களூருடன் இரட்டை ரயில் பாதை மூலம் இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X