புலிகளிடமிருந்து மீட்ட பகுதிகளில் கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களைக் குவிக்கும் இலங்கை

விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக இலங்கை வெளியில் கூறினாலும் கூட உள்ளூர அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
இதற்காகவே வட பகுதிகளில் ராணுவத்தை இன்னும் முழுமையாக வாபஸ் பெறாமல் உள்ளது. மேலும், அப்பகுதிகளில் கூடுதலாக ராணுவத்தினரை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்ட அவர்களின் முன்னாள் வலுவிடங்களில் கூடுதல் படையினர் குவிக்கப்படவுள்ளனர்.
இதற்காக 50 ஆயிரம் கூடுதல் வீரர்களை எடுக்கவுள்ளனராம். இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், வட பகுதியில் உள்ள புலிகளின் முன்னாள் இடங்களை கூடுதல் படையினர் பாதுகாப்பார்கள். இப்பகுதிகளைப் பாதுகாக்க ராணுவத்தினர் மிகவும் அவசியம்.
போரின்போதும், போருக்குப் பின்னரும் எங்களிடம் இதுவரை 10 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்துள்ளனர். அனைவரும் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மறு வாழ்வுக்கான பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications