தமிழகத்தில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள்!
சென்னை: தமிழகத்தில் 30 மாவட்டங்களில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அவர் அளித்த பதில்:
ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ரேசன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் கட்டமாக 60 சதவீத அரிசியும், 2வது கட்டமாக 40 சதவீத அரிசியும் வழங்கப்படுகிறது.
முதலில் 10 கிலோ அரிசியும், அடுத்த கட்டமாக 10 கிலோ அரிசியும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. சிலர் முதலில் 10 கிலோ கொடுத்துவிட்டு 2வதாக வரும் அரிசியை ரேசன் ஊழியர்கள் கடத்துவதற்கு தந்துவிடுவதாக புகார் வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் தவறு செய்த 29 விற்பனையாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு இது போன்ற குற்றங்கள் குறைந்துள்ளன.
கோவை, கன்னியாகுமரி, நெல்லை போன்ற பிற மாநில எல்லைப் பகுதிகளில் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் அரிசி கடத்தல் தொடர்பாக 4,060 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 135 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முன்பெல்லாம் அரிசி பறிமுதல் செய்தல், டிரைவர்- கிளீனர் மீது வழக்கு போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் தற்போது லாரிகளின் பெர்மிட் ரத்து செய்வது, டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்வது போன்ற கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அரிசி எங்கிருந்து கடத்தப்பட்டது என்பதை அறிந்து அதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 371 லாரிகளின் பெர்மிட்டை ரத்து செய்யவும், 208 டிரைவர்களின் லைசென்சை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொது மக்களின் பிரதிநிதிகள் ரேசன் கடைகளில் நேரடியாக ஆய்வு செய்யலாம். கட்டுப்பாட்டு அறையில் புகார் செய்யலாம். அதன் பிறகும் நடவடிக்கை இல்லையெனில் என்னிடம் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
30 மாவட்டங்களில் 25 லட்சம் போலி ரேசன் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கோவை, திருச்சி, சென்னை அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தணிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications