பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாதம்-சட்டசபையில் சுவாரஸ்யம்

சட்டசபையில் இன்று சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மானிய கோரிக்கைகளை அமைச்சர் கீதாஜீவன் தாக்கல் செய்தார்.
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறுகையில், அகில இந்திய அளவில் பெண்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் மகளிர் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆதரவாக உள்ளது.
இன்று சமூக நலத்துறை சார்பாக தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் பெண் உறுப்பினர்களே பங்கேற்கிறார்கள். அதற்கு பெண் அமைச்சர் பதில் சொல்ல இருக்கிறார் என்றார்.
இதையடுத்து மூத்த உறுப்பினரான காங்கிரஸ் கட்சியின் யசோதா, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கூட்டத்தை வழி நடத்தினார். விவாதம் தொடங்கியது.
முதலில் அதிமுக உறுப்பினர் பதர் சயீத் பேசுகையில், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். தமிழக சட்டசபையில் பெண் எம்.எல்.ஏ.க்கள் பேச 33 சதவீத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து ராணி வெங்கடேசன் (காங்), ராணி (தி.மு.க.), சக்தி கமலம்மாள் (பா.ம.க.), லீமா ரோஸ் (மார்க். கம்யூ), பத்மாவதி (இந்திய கம்யூ), சங்கரி நாராயணன் (தி.மு.க.), ராம ஜெயம் (அ.தி.மு.க.) காயத்ரி தேவி (காங்), ஆகியோர் பேசினார்கள்.
விவாதத்திந் முடிவில் கீதா ஜீவன் பதிலளித்தார்.
இந்தியாவிலேயே பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் சட்டசபைக் கூட்டம் என்ற வரலாற்றுப் பெருமையை இந்தக் கூட்டம் பெற்று விட்டது.












Click it and Unblock the Notifications