தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில்,
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதே போல ராஜஸ்தானில் ஒரு விசைத்தறி பூங்கா அமைக்கப்படும்.
மேலும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் ஆகிய இடங்களில் தரை விரிப்புகள் எனப்படும் கார்பெட்களுக்கான மாபெரும் பூங்காங்கள் அமைக்கப்படும்.
ஜவுளித் துறைக்கான வரி விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும்.
ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான ஜவுளிப் பூங்கா திருப்பூரில் அமையும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications