இலங்கையில் முஸ்லீம் குழுக்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண்
கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் முஸ்லீம் ஆயுதக் குழுக்களில் சில, தங்களது ஆயுதங்களை ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைந்தது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கணிசமான முஸ்லீம்கள் உள்ளனர். விடுதலைப் புலிகள் ஆதிக்கத்தின் கீழ் இப்பகுதி இருந்தபோது முஸ்லீம்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானதாக கூறப்பட்டது.
இதையடுத்து முஸ்லீம்களில் சிலர் தங்களது சுய பாதுகாப்புக்காக ஆயுதங்களை கையில் எடுத்தனர். பின்னர் புலிகள் அமைப்பு இப்பகுதியிலிருந்து விரட்டப்பட்டவுடன், இந்த முஸ்லீம் ஆயுதக் குழுக்களின் எண்ணிக்கை பெருகியது. கருணா மற்றும் அரசுக் குழுக்களுடன் இணைந்தும் இவர்கள் செயல்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது போர் முடிந்து விட்டதால் இனிமேல் யாரும் ஆயுதங்களை வைத்திருக்க் கூடாது, சரணடைய வேண்டும் என ராணுவம் உத்தரவிட்டது.
ஆனால் யாரும் சரணடைய முன்வரவில்லை. ஆயுதங்களையும் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு அரசும், ராணுவமும் கெடு விதித்தன. பொது மன்னிப்பும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆயுதக் குழுக்களில் ஒரு தரப்பினர் சனிக்கிழமை மாலை போலீஸாரிடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தன்குடி என்ற இடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு மாகாண முஸ்லீம் மசூதிகள் அமைப்பின் மூலமாக இந்த ஆயுத ஒப்படைப்பு நடந்தது.
இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அனைவரும் ஆயுதங்களை ஒப்படைக்க முன்வர வேண்டும் என டிஐஜி எடிசன் குணதிலகே கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிஸ்புல்லா கூறுகையில், புலிகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள நான் 600 துப்பாக்கிகளை முஸ்லீம் இளைஞர்களுக்குவழங்கினேன்.
மறைந்த அதிபர் பிரேமதாசாவிடமிருந்து இவற்றைப் பெற்று விநியோகித்தேன். இவற்றை வைத்துக் கொண்டு பாதுகாப்புப் படையினருடன் நாங்கள் ஒருபோதும் மோதியதில்லை. புலிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தினோம் என்றார் அவர்.
இதற்கிடையே, இன்னும் ஆயுதங்களை ஒப்படைக்காமல் இருக்கும் முஸ்லீம் குழுக்களைக் கண்டுபிடித்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய ராணுவம் விரைவில் நடவடிக்கையில் இறங்கப் போகிறதாம்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications