ஊக்கமருந்து-தமிழக வீரர் கோபிநாத்துக்கு 2 ஆண்டுகள் தடை
டெல்லி: தமிழக பாடி பில்டிங் வீரர் கோபிநாத் மற்றும் கேரள பளூ தூக்குதல் வீரர் ஷியாம்லால் ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்திய காரணத்துக்காக இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் இந்தாண்டு ஜனவரியில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டிகளில் தமிழக வீரர் கோபிநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதேபோல் பூனேவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் பளூதூக்குதல் தொடரில் பங்கேற்ற 19 வயதான கேரள வீரர் ஷியாம்லால், தமிழக பளூ தூக்கும் வீராங்கனை கவிதா உள்ளிட்டோர் மீதும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டது.
இந்த புகார்களை சுதிர் நந்திராஜோக் என்ற வக்கீல் தலைமையிலான கமிட்டி விசாரித்து வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில் கோபிநாத், ஷியாம்லால் ஆகியோர் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் போட்டிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டு தடை விதிப்பதாக அந்த கமிட்டி தெரிவித்துள்ளது. தமிழக வீராங்கனை கவிதா மீதான குற்றம்சாட்டு குறித்த தீர்ப்பினை இன்னும் வழங்கவில்லை. அதை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த மாதம் இதே போல் மற்றொரு கமிட்டி ஊக்கமருந்து பயன்படுத்திய நான்கு பாடி பில்டிங் வீரர்களுக்கு இரண்டு ஆண்டு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications