Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் பதவி நீட்டிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரனின் பதவி காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாட ஒவ்வொரு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசால் சொலிசிட்டர் ஜெனரல் நியமிக்கப்படுகிறார்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு 12 சொலிசிட்டர் ஜெனரல்களை நியமித்தது. இவர்களில் 7 பேர் உச்ச நீதிமன்றத்திலும், 5 பேர் பல்வேறு உயர் நீதிமன்றத்திலும் அரசுக்காக வாதாட இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருக்கும் ரவீந்திரனின் பதவிக்காலம் மேலும் மூன்ற ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த 2008ல் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ரவீந்திரன் தற்போது தொடர்ந்து இரண்டாவது முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார்.

கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றங்களின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக வாதாடும் பொறுப்பு அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர் இந்த நான்கு மாநில உயர் நீதிமன்றங்களிலும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் 248 அரசு துறைகளுக்கு ஆதரவாக வாதாடுவார்.

பிரபல வக்கீலான ரவீந்திரன், மோகன் குமாரங்கலத்திடம் ஜூனியராக வேலை பார்த்தவர். 1963 முதல் காங்கிரஙஸ் கட்சியில் இருக்கும் இவர் காமராசர், பக்தவச்சலம், கக்கன், ஜிகே மூப்பனார் உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகியவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+