For Daily Alerts
Just In
திராவிட தொழிலாளர் மக்கள் கட்சி உதயம்
ஸ்ரீரங்கம்: தமிழக மருத்துவர் சமூகத்தினர் சார்பில் திராவிட தொழிலாளர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராம் கல்யாண மகாலில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் நடேசன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் திராவிடர் தொழிலாளர் மக்கள் கட்சி துவங்கப்பட்டது. இதன் தலைவராக நடேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்பு நிற கொடியில் மஞ்சள் வட்டத்தில் நீல நிற சிங்கம் கர்ஜிப்பது போல் அமைந்துள்ளது.
கூட்டத்தில், மருத்துவ இன மக்களுக்கு 7 சதவீத தனி உள் ஒதுக்கீடு வழங்கக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
மேலும், இதனை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்துவது என்றும் மருத்துவர், நாவிதர் சமூக அறக்கட்டளை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
Comments
Story first published: Wednesday, July 8, 2009, 11:22 [IST]