திமுக மாஜி அமைச்சர் ராஜாவுக்கு எதிராக மக்கள் போராட்டம்
ஈரோடு: 15க்கும் மேற்பட்ட குடும்பங்களை இடத்தை காலி செய்யுமாறு முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆட்கள் மிரட்டியதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஈரோடு கவுந்தப்பாடி அருகே உள்ளது எல்லீஸ் பேட்டை.
இங்கு பல ஆண்டுகளாக 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலத்தை, தற்போது முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. .
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா - வின் ஆட்கள் அப் பகுதியில் உள்ள மக்கள் வசிக்கும் இடத்தை காலி செய்யுமாறு அச்சறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், ஆவேசம் அடைந்த அப் பகுதி மக்கள் என்.கே.கே.பி. ராஜாவும், அவரது ஆட்களும் தங்களை மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, அப்பகுதி மக்களுடன் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு
செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் இது வரை எந்த வித மாற்று ஏற்பாடும் செய்து தரவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், கவுந்தபாடி சாலையில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பி. ராஜாவின் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் சமையல்
செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொது மக்கள் கலைந்து
சென்றனர்.
திங்கள் கிழமைக்குள் இந்த பிரச்சனையில் உரியநடவடிக்கை எடுக்காவிட்டால், சாலையின் நடுவில் உட்கார்ந்து சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக
எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை ராஜா அபகரிக்க முயன்றாகவும், அந்தக் குடும்பத்தினரை கடத்திச் சென்று மிரட்டியதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சர்ச்சையால்தான் ராஜாவின் பதவி பறிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
கலவரத்தைத் தூண்டிய பெரியார் ஊர்வலம்..! ‘சோ’ பற்ற வைத்த நெருப்பு.. 1971 தேர்தலில் சாதித்த திமுக! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
எனக்கு ஒன்னு.. என் மகனுக்கு ஒன்னு.. வாரிசுகளுக்கு சீட் கேட்கும் திமுக அமைச்சர்கள்.. லிஸ்ட் பெருசா போகுதே -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்!










Click it and Unblock the Notifications