தவறாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை சட்டம்!
நெல்லை: நெல்லையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். பொய் வழக்குகள் போடுகிறார்கள் என மக்கள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி டிபேன் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு தட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்ட களம் அமைப்பின் இயக்குனர் பரதன் மீது போலீசார் முன்விரோதம் காரணமாக பொய் வழக்கு போட்டுள்ளனர். இது தொடர்பாக ஐ.நா. மற்றும் மனித உரி்மை அமைப்பினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், அதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், போஸ்டர் பிரச்சாரம் உடனடியாக தொடக்கப்படும்.
பின்னர் ஒரு வாரம் தொடர் ஆர்பாட்டம் நடத்தவும், வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி மாநில அளவில் மனித உரிமை காப்பாளர் மாநாடு மற்றும் பேரணியை நெல்லையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களினால் கொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. சட்டங்களை முறையாக அமுல்படுத்தி நேர்மையான போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் இந்த கொலைகளை தடுக்கலாம். நீண்ட காலமாக ஒரே பகுதியில் பணியாற்றும் போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
சில பகுதிகளில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. சட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications