தவறாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை சட்டம்!
நெல்லை: நெல்லையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். பொய் வழக்குகள் போடுகிறார்கள் என மக்கள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் ஹென்றி டிபேன் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் வன்கொடுமை தடுப்பு தட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்ட களம் அமைப்பின் இயக்குனர் பரதன் மீது போலீசார் முன்விரோதம் காரணமாக பொய் வழக்கு போட்டுள்ளனர். இது தொடர்பாக ஐ.நா. மற்றும் மனித உரி்மை அமைப்பினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொய் வழக்கை வாபஸ் பெற கோரியும், அதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், போஸ்டர் பிரச்சாரம் உடனடியாக தொடக்கப்படும்.
பின்னர் ஒரு வாரம் தொடர் ஆர்பாட்டம் நடத்தவும், வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி மாநில அளவில் மனித உரிமை காப்பாளர் மாநாடு மற்றும் பேரணியை நெல்லையில் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் சாதி ரீதியான மோதல்களினால் கொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. சட்டங்களை முறையாக அமுல்படுத்தி நேர்மையான போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் இந்த கொலைகளை தடுக்கலாம். நீண்ட காலமாக ஒரே பகுதியில் பணியாற்றும் போலீசாரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
சில பகுதிகளில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. சட்டத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications