குமரி வந்த மர்ம படகு-போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகுதியில் சுற்றி கொண்டிருந்த மர்ம கப்பலை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் நேற்று காலை சுமார் 7 மணிக்கு ஒரு நீலநிற படகு ஒன்று கடலில் சுற்றி கொண்டிருந்தது. அது மீன்பிடி படகு இல்லை என்பதை உறுதி செய்த மீனவர்கள் உடனடியாக போலீசுக்கு தெரிவித்தனர்.
அவர்கள் கடற்கரையில் நின்றபடியே படகை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த படகு சிறிது நேரத்தில் ஆழ்கடல் பகுதிக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து போலீசார் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த படகை தேடி சென்றனர்.
நீண்ட தேடலுக்கு பின்னர் அந்த படகு முட்டம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதை வழிமறித்து அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது படகில் இருந்தவர்கள் தாங்கள் தூத்தூரை சேர்ந்தவர்கள் என்றும், கன்னியாகுமரிக்கு ஐஸ் வாங்க வந்ததாகவும் கூறினார்கள். அவர்களது பதிலில் திருப்தியடையாத போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications