அணை பாதுகாப்புக்கு கேரளா முன்னுரிமையாம்!
திருவனந்தபுரம்: முல்லைபெரியாறு அணையை பாதுகாப்பதற்கு கேரள அரசு முன்னுரிமை கொடுக்கும் என அம்மாநில வருவாய்துறை அமைச்சர் என கேபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முல்லைபெரியாறு அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த முயற்சித்து வருகிறது.
ஆனால், கேரளா அரசு அணையின் நிலைமை சரியில்லை. உயரத்தை அதிகரித்தால் அணை உடைந்துவிடாலம் என முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதில் அளித்த வருவாய்துறை அமைச்சர் கேபி ராஜேந்திரன் கூறுகையில்,
பெரியாறு அணைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை அறிவோம். அந்த அச்சுறுத்தலை அகற்றி அதை பாதுகாக்க முயல்வோம். அதற்கு முன்னுரிமை கொடுப்போம்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் நதி மேலான்மை ஆணையம் இதுவரை தேவையான நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் என்றார்.












Click it and Unblock the Notifications