தமிழர்களிடம் சிங்களத்தை புகுத்தும் இலங்கை
கொழும்பு: போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறேன் என்ற பெயரில் தற்போது அவர்களிடம் இலங்கை அரசு சிங்கள மொழியை புகுத்தி வருகிறது.
இலங்கையில் போர் என்ற பெயரில் அந்நாட்டு ராணுவம் செய்த அட்டூழியத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள். தற்போது சுமார் 3 லட்சம் தமிழர்கள் முகாம்களில் வாடி வருகின்றனர்.
இந்நிலையில் போரின் போது பிடிபட்ட 300 விடுதலைப் புலிகளை இலங்கை அரசு, கொழும்பில் இருந்து சுமார் 260 கிமீ., கிழக்கில் இருக்கும் வெலிகண்டா அரசு மறுமலர்ச்சி முகாமில் தங்க வைத்துள்ளது. அவர்களூக்கு தச்சு, வீடு கட்டுதல், தையல், சமையல் உள்ளிட்ட சில தொழில்களை கற்று கொள்ள உதவி வருவதாக கூறுகிறது.
அவர்களுக்கு கம்யூட்டர் மற்றும் ஆங்கில பயிற்சியும், அதோடு சேர்ந்து சிங்களமும் கற்று தரப்படுவதாக பெருமிதம்பட்டு கொள்கிறது.
மறுவாழ்வு மையத்தை சுற்றி சிங்கள ராணுவம் காவல் காக்கிறது. இது போல் மேலும் பல மறுவாழ்வு மையங்களை திறந்து அதில் இறுதி கட்ட போரின்போது கைது செய்யப்பட்ட மேலும் 3000 புலிகளை சேர்க்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த மையத்தில் இருக்கும் விடுதலை புலிகளின் கிழக்கு பகுதி கமாணடோவாக இருந்த தேவநாயகம் சங்கர் என்ற 29 வயது இளைஞர் கூறுகையில்,
தலைவர் இல்லாத நிலையில் தற்போது இங்கு வழி நடத்தி செல்ல ஆளில்லை. அதனால் சரணடைய நேரிட்டது. மறுவாழ்வு திட்டம் முடிந்த பின்னர் வெளிநாட்டில் சென்று வாழ நினைக்கிறேன். இங்கே எங்களால் வாழ முடியாது என்றார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications