தமிழர்களிடம் சிங்களத்தை புகுத்தும் இலங்கை
கொழும்பு: போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு மறுவாழ்வு அளிக்கிறேன் என்ற பெயரில் தற்போது அவர்களிடம் இலங்கை அரசு சிங்கள மொழியை புகுத்தி வருகிறது.
இலங்கையில் போர் என்ற பெயரில் அந்நாட்டு ராணுவம் செய்த அட்டூழியத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள். தற்போது சுமார் 3 லட்சம் தமிழர்கள் முகாம்களில் வாடி வருகின்றனர்.
இந்நிலையில் போரின் போது பிடிபட்ட 300 விடுதலைப் புலிகளை இலங்கை அரசு, கொழும்பில் இருந்து சுமார் 260 கிமீ., கிழக்கில் இருக்கும் வெலிகண்டா அரசு மறுமலர்ச்சி முகாமில் தங்க வைத்துள்ளது. அவர்களூக்கு தச்சு, வீடு கட்டுதல், தையல், சமையல் உள்ளிட்ட சில தொழில்களை கற்று கொள்ள உதவி வருவதாக கூறுகிறது.
அவர்களுக்கு கம்யூட்டர் மற்றும் ஆங்கில பயிற்சியும், அதோடு சேர்ந்து சிங்களமும் கற்று தரப்படுவதாக பெருமிதம்பட்டு கொள்கிறது.
மறுவாழ்வு மையத்தை சுற்றி சிங்கள ராணுவம் காவல் காக்கிறது. இது போல் மேலும் பல மறுவாழ்வு மையங்களை திறந்து அதில் இறுதி கட்ட போரின்போது கைது செய்யப்பட்ட மேலும் 3000 புலிகளை சேர்க்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து அந்த மையத்தில் இருக்கும் விடுதலை புலிகளின் கிழக்கு பகுதி கமாணடோவாக இருந்த தேவநாயகம் சங்கர் என்ற 29 வயது இளைஞர் கூறுகையில்,
தலைவர் இல்லாத நிலையில் தற்போது இங்கு வழி நடத்தி செல்ல ஆளில்லை. அதனால் சரணடைய நேரிட்டது. மறுவாழ்வு திட்டம் முடிந்த பின்னர் வெளிநாட்டில் சென்று வாழ நினைக்கிறேன். இங்கே எங்களால் வாழ முடியாது என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications