For Daily Alerts
Just In
பொய்யான பாலியல் புகார் - ராணுவ பெண் அதிகாரி நீக்கம்
டெல்லி: உயர் அதிகாரிகள் தன்னிடம் பாலியல் சேஷ்டைகள் செய்ததாக பொய்யான புகார் கொடுத்த பெண் ராணுவ அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இப்படி பொய் புகார் கூறி பதவியை இழந்து நிற்பவர் கேப்டன் பூனம் கெளர். இவர் தனது உயர் அதிகாரிகள் தன்னிடம் பாலியல் சேஷ்டைகள் செய்ததாக புகார் கூறினார். இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையில் கெளர் கூறியது போல எதுவும் நடக்கவில்லை என்று தெரிய வந்தது. பொய்யான புகார்களை அவர் கூறியதும், வேண்டும் என்றே இந்த செய்தியை மீடியாவுக்கு கசிய விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கெளர் புகார் கூறியிருந்தார்.
Comments
Story first published: Saturday, July 11, 2009, 17:56 [IST]