முத்துலட்சுமியின் ஜாமீன் மனு - கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூரில் வைத்து முத்துலட்சுமியை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். அவர் தற்போது மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்லார்.
கொள்ளேகால் தாலுகா ராம்புரா போலீஸ் நிலைய தாக்குதல், மேட்டூர் பாலம் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு, கர்நாடக போலீஸ் சூப்பிரண்டு அரிகிருஷ்ணா கொலை ஆகிய வழக்குகளில் முத்துலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடா சட்டத்தின் கீழ அவர் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி முத்துலட்சுமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்தக் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.












Click it and Unblock the Notifications