போலி மனித உரிமை அமைப்புகள் - தேனி எஸ்.பி எச்சரிக்கை
தேனி: மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வரும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தேனி மாவட்டத்தில் மனித உரிமை ஆணையம், அமைப்பு என்ற பெயரில் அரசு சாரா அமைப்புகள் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இத்தகைய போலி அமைப்புகள் மீதும் தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதி என கூறிக் கொண்டு செயல்படுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு சாரா அமைப்புகள் தங்களது பெயர் பலகை, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுகளில் தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தின் சின்னத்தை பயன்படுத்த கூடாது.
பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத அமைப்புகள் தங்களது வாகனங்களில் மனித உரிமை என்ற வாசகத்தை பயன்படுத்த கூடாது.
சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்புகள் குறித்து பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.
அவ்வாறு புகார் செய்யப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications