எட்டு வெளிநாட்டு சேவையை மேற்கொள்ளத் தயாராகும் கிங் பிஷர்

முதல் கட்டமாக மும்பை - சிங்கப்பூர், மும்பை -ஹாங்காங் ஆகிய சேவைகளை செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.
இந்த இரு சேவைகளும் தினசரி நேரடி சேவையாகும். இந்த சேவைக்கு ஏர்பஸ் ஏ330-200 விமானத்தை பயன்படுத்தவுள்ளதாம் கிங்பிஷர் நிறுவனம்.
விரைவில் இந்த இரு சேவையிலும் முன்பதிவு தொடங்கும் என கிங்பிஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல மும்பை - பாங்காக், மும்பை - துபாய், மும்பை - கொழும்பு ஆகிய சேவைகளையும் தொடங்கவுள்ளது கிங்பிஷர்.
அதேபோல டெல்லி - லண்டன்- டெல்லி மார்க்கத்திலும் சேவையைத் தொடங்க அனுமதி கோரி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளதாம் கிங்பிஷர்.
மேலும், டெல்லி -பாங்காக், டெல்லி -துபாய் ஆகிய மார்க்கங்களிலும் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது கிங்பிஷர்.
அதேசமயம், பெங்களூர் -லண்டன்- பெங்களூர் மற்றும் கொழும்பு - பெங்களூர் - கொழும்பு சேவையை செப்டம்பர் 15ம் தேதி முதல் நிறுத்தி விடவும் கிங்பிஷர் தீர்மானித்துள்ளது.












Click it and Unblock the Notifications