மாணிக் பார்ம் வந்த ராஜபக்சே மகன் மீது சேறு வீச்சு
Subscribe to Oneindia Tamil

சனிக்கிழமை காலை மாணிக் பார்ம் அகதிகள் முகாமுக்கு பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் சகிதம் நமல் ராஜபக்சே வந்தார். அவர் ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.
அப்போது ராஜபக்சே மகன் மீது பொதுமக்கள் சேற்றை வாரியிறைத்துள்ளனர். கற்களும் சரமாரியாக வீசப்பட்டது.
இதனால் நமல் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் சமாளித்துக் கொண்டார். ஆனால், இந்த சம்பவங்களை படம் பிடித்த புகைப்படக்காரர்களிடமிருந்த கேமராக்களைப் பறித்து பிலிம் ரோல்களை வெளியில் எடுத்து விட்டார்.
இருப்பினும் சேறு வீசிய முகத்துடன் நமல் இருப்பது போன்ற படம் தமிழ்விண் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications