மெட்ரோ பாலம் இடிந்த விவகாரம்-ஸ்ரீதரன் ராஜினாமா நிராகரிப்பு

மெட்ரோ ரயில்களை நிர்மானிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் ஸ்ரீதரன். இவரது நேரடிப் பார்வையில்தான் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் உருவானது.
இந்த நிலையி்ல் நேற்று லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே பாலம் இடிந்து விழுந்து 6 பேர் இறந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
இதைத் தொடர்ந்து இதற்கு தானே முழுப் பொறுப்பேற்பதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்தாகவும அறிவித்தார் ஸ்ரீதரன்.
ஆனால் இதை ஷீலா தீக்ஷித் நிராகரித்து விட்டார். இதுகுறித்து இன்று அவர் கூறுகையில், மெட்ரோ தலைவர் ஸ்ரீதரனின் ராஜினாமாவை நான் ஏற்கப் போவதில்லை.
அவரது சேவை டெல்லி மெட்ரோவுக்கு தொடர்ந்து தேவை. டெல்லிக்கு மட்டுமல்லாது நாடு முழுவதும் அவர் மிகச் சிறப்பான சேவையாற்றியவர். எனவே அவரது ராஜினாமாவை நிச்சயம் ஏற்க முடியாது என்றார் தீக்ஷித்.
இதற்கிடையே நேற்று பாலம் இடிந்து விழுந்த பகுதியை நேரில் பார்வையிட்டார் ஸ்ரீதரன். தேவையான அறிவுரைகளையும் அவர் சைட் என்ஜீனியர்களுக்கு வழங்கினார்.
பாலத்தில் மீண்டும் விபத்து..
இந் நிலையில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளான இடத்தில் இன்று மீண்டும் ஒரு விபத்து நடந்தது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடு்த்தப்பட்ட இரண்டு கிரேன்கள் நொறுங்கி விழுந்தன. இதில் யாரும் உயிரிழக்கவில்லை.












Click it and Unblock the Notifications