ஒகனேக்கல் பிரச்சினையால் தமிழகத்துடன் உறவு பாதிக்காது - எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil
ஷிமோகா: ஒகனேக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையால் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
ஷிமோகா வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒகனேக்கல் திட்டம் தொடர்பாக கூட்டு சர்வே நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
இந்தப் பிரச்சினை சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ளப்படும்.
திருவள்ளுவரின் சிலை ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூரில் திறந்து வைக்கப்படும். இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார்.
அதேபோல ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலை திறந்து வைக்கப்படும் என்றார் எதியூரப்பா.












Click it and Unblock the Notifications