குஜராத் சாராய சாவுகள்-மக்களவையில் அமளி
Subscribe to Oneindia Tamil

இன்று காலை மக்களவை கூடியதும் குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார்.
குஜராத் சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்படுவதால் இந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும். இங்கும் பேச விடாவிட்டால் இதை எங்கு தான் போய் பேசுவது என்றனர். இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே கடும் அமளி ஏற்பட்டது.
குஜராத் காங்கிரஸ் எம்பிக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவையில் மையப் பகுதியில் குவிந்தனர். பின்னர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி முன்னேறினர். அவர்களை பிற காங்கிரஸ் எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.
ஆனாலும் அமளி ஓயாதாதால் அவையை பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார் சபாநாயகர் மீரா குமார்.












Click it and Unblock the Notifications