தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதியில்லை!
சென்னை: தமிழகத்தில் அகலப்பாதை பணிகளுக்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம் எழுதவுள்ளதாகத் தெரிகிறது.
அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்துள்ள ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் புதிய திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்காதது மட்டுமல்லாமல், நடந்து கொண்டிருக்கும் திட்டப் பணிகளுக்குக் கூட உரிய நிதி ஒதுக்கப்படவில்லை,
குறிப்பாக அகலப் பாதை பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அந்தப் பணிகள் முடங்கவுள்ளன.
மீட்டர் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணிகளுக்கு மட்டும் ரூ. 611 கோடி நிதியை தென்னக ரயில்வே கோரியிருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் ரூ. 245 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 234.80 கோடி நிதியில் இப்போது ரூ. 10 கோடி மட்டுமே மிச்சமுள்ளது.
இந் நிலையில் இப்போதைய பட்ஜெட்டிலும் போதிய நிதி ஒதுக்கப்படாததால் தமிழக அகலப்பாதை பணிகள் முடங்கிப் போகவுள்ளன.
இதையடுத்து கூடுதல் நிதி கோரி ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்ப தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் சுமார் 1000 கி.மீ. மீட்டர் கேஜ் பாதைகள் அகலப் பாதைகளாக மாற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கு ரூ. 2,700 கோடி தேவையாம். ஆண்டுக்கு ரூ. 500 கோடி என்று ஒதுக்கினால் கூட பணிகள் முடிவடைய 5 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம்.
வெளுத்து வாங்கிய அதிமுக எம்பி...
இந் நிலையில் மாநிலங்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி. பாலகங்கா பேசுகையில்,
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் மீது சொற்ப கவனமே செலுத்தப்பட்டுள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மட்டும்தான் மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அதிகளவில் உள்ளன. இவற்றை அகலபாதையாக மாற்ற வேண்டும்.
விழுப்புரம்- தஞ்சாவூர் அகல ரயில் பாதை பணி 1998-99ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2007ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், இன்னும் முடிந்தபாடில்லை.
விழுப்புரம்- காட்பாடி அகல ரயில் பாதைத் திட்டம் 2001ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2007ம் ஆண்டு முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் 10 கிலோ மீட்டர் தூரம்தான் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பணியை உடனடியாக முடிக்க வேண்டுமென அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
சேலம்- கரூர் புதிய ரயில் பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டு ரூ. 613 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 12 வருடம் கழிந்த பின்னரும் 50 சதவீதம் தொகை கூட இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படவில்லை.
திருவள்ளூர்- அரக்கோணம், சென்னை- பீச்- கொருக்குப்பேட்டை ஆகிய இருவழிப் பாதை திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். இத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், சென்னை மாநகரத்தை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வசிக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும் பயனனடைவார்கள் என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications