வட்டி உயரும்... மிரட்டும் அரசு வங்கிகள்!

வட்டி விகிதம் எக்காரணம் கொண்டும் உயர்த்தப்படாது என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக் கிழமை அறிவித்த, நிலையில், அவரது அறிவிப்பை மறுக்கும் விதமாக ஓபி பட் தன்னிச்சையாக பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'இது கடன் சீஸன் என்பதால் இந்த தருணத்தில் வட்டி உயர்வு தவிர்க்க முடியாதது' என்று கூறியுள்ள பட், 'இன்றைய சூழலில் பட்டியலிடப்பட்ட பெரிய நிறுவனங்களின் செலவில் 8 முதல் 9 சதவிகிதம் அளவுதான் வரும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அது ஒரு பெரிய சுமையே அல்ல', என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த வட்டி உயர்வு பொதுமக்களை எந்த அளவு பாதிக்கும் என்பதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.
ரிசர்வ் வங்கி இதுகுறித்து ஏதும் அறிவிக்கும் முன்னர் வணிக வங்கிகள் தாங்களாகவே வட்டி உயர்வு குறித்துப் பேசியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. கடந்த ஓராண்டு காலமாக வட்டி விகிதத்தை கணிசமாக குறைக்குமாறு ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் தொடர்ந்து வணிக வங்கிகளுக்கு அறிவுறுத்தி வந்துள்ளன. ஆனால் அதைக் காதிலேயே வாங்கவில்லை எந்த வங்கியும்.
சமீபத்தில் பதவியேற்ற கையோடு, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த அறிவுரையை வங்கிகளுக்கு வழங்கினார். மக்கள் நலத் திட்டங்களைக் கெடுத்துவிடாதீர்கள்; நிறைவேற உதவுங்கள் என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார். இதுகுறித்து ஒரு சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து அனைத்து அரசு வங்கி தலைமை நிர்வாகிகளுடனும் பேச்சு நடத்தியும் பார்த்துவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்தான், இனி வட்டி விகிதம் உயராமல் பார்த்துக் கொள்வோம். அதற்கேற்ப நிதி கையாளப்படும் என்று அறிவித்தார் பிரணாப் முகர்ஜி.
அவர் அப்படி அறிவித்த அடுத்த ஒரு நாளில் ஓபி பட் தன்னிச்சையாக வட்டி உயர்வு அறிவிப்பை திங்களன்று வெளியிட்டுள்ளார்.
நிதி நிர்வாகம் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் யார் கையில் உள்ளது...? ரிசர்வ் வங்கியிடமா... நிதி அமைச்சகத்திடமா... அல்லது இவர்களையும் தாண்டிய சூப்பர் பவர்களாக செயல்படும் இந்த வணிக வங்கி நிர்வாகிகளிடமா?
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications