ஆகஸ்ட் 9ல் திருவள்ளுவர் சிலை திறப்பு: கன்னட அமைப்புகள் எதிர்ப்பு
பெங்களூர்: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன.
பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 9ல் திறந்து வைக்கிறார்.
அதேபோல சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகஸ்ட் 13ம் தேதி திறந்து வைக்கிறார்.
இந் நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து கன்னட கலாசார சங்கம் மற்றும் ஜெய் கர்நாடகா அமைப்பு ஆகியவவற்றைச் சேர்ந்தவர்கள் மல்லேஸ்வரம் தேவய்யா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு நிறைவேற்றி வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்த வேண்டும், இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அதுவரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது.
ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட பிறகே திருவள்ளுவர் சிலைத் திறக்கலாம் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
சிலை திறப்பு-கருணாநிதி அதிகாரப்பூர்வ அறிவி்ப்பு:
இதற்கிடையே பெங்களூரில் மூடிக் கிடக்கும் திருவள்ளுவர் சிலை ஆகஸ்ட் 9ம் தேதி திறக்கப்படும் என்று இன்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கருணாநிதி அவை விதி எண் 110-ன் கீழ் ஒரு அறிக்கை படித்தார்.
வர் கூறுகையில், இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொண்ட வகையில் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி அன்று பெங்களூர் சென்று நானும், கர்நாடக மாநில முதல்வரும் கலந்து கொள்ளும் விழாவில் திருவள்ளுவர் சிலையினை அங்கே திறப்பதென்றும்
அது போலவே ஆகஸ்ட் 13ம் தேதி கர்நாடக முதல்வர் எதியூரப்பா சென்னைக்கு வந்து நானும் அவரும் கலந்து கொள்ளும் விழாவில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையினை இங்கே திறந்து வைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு மாநிலங்களைச்சேர்ந்த இரு பெரும் சான்றோர்களையும், கௌரவிக்கும் வகையில் இந்த விழாக்கள் இரு மாநிலங்களின் ஒப்புதலோடு நடை பெறுவது இரு மாநில மக்களிடையேயும், அரசுகளிடையேயும் நல்லுறவை ஏற்படுத்த வழி வகுக்குமென்று நம்புகிறேன் என்றார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications