For Daily Alerts
Just In
பிரபாகரனை சந்தித்திருந்தால் பேசியிருப்பேன்-ராஜபக்சே
டைம் இதழுக்கு ராஜபக்சே பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பிரபாகரன் குறித்து கூறியுள்ளார்.
ராஜபக்சே கூறுகையில், நான் ஒருபோதும் பிரபாகரனை நேரில் பார்த்ததில்லை. ஒரு வேளை உயிருடன் அவரைப் பிடித்திருந்தால் அவருடன் நிச்சயம் பேசியிருப்பேன்.
இங்கு கொண்டு வரச் செய்து, ஏன் இப்படியெல்லாம் மடத்தனமாக செய்தீர்கள் என்று கேட்டிருப்பேன். இதைத் தவிர வேறு என்ன அவரிடம் பேச முடியும்?.
பிரபாகரன் மரணச் செய்தி என்னை வந்தடைந்ததும், நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன். புத்த மதத்திற்கு நன்றி சொன்னேன். அந்த செய்தி எனக்கு உண்மையில் பரிசு போன்றது.
பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது குறித்தெல்லாம் விசாரிக்கும் ஆர்வம் என்னிடம் இல்லை. அவரை சுட்டுக் கொன்றார்கள். அது மட்டும்தான் தெரியும். அது போதும் என்றார் ராஜபக்சே.
Comments
Story first published: Tuesday, July 14, 2009, 15:11 [IST]