மானபங்க முயற்சி-வாலிபரை அடித்தே கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்த வாலிபரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொன்றனர்.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆரூண் (28), ஆனந்த் (25) இருவரும் நேற்றிரவு மது அருந்திவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
கச்சிராப்பாளையம் அருகே தனது வீட்டின் வெளியே நின்றிருந்த வீரப்பன் என்பவரது மகள் எழில்மதியை (22) ஆரூணும், ஆனந்தும் மானபங்கப்படுத்த முயன்றனர்.
எழில்மதி கூச்சல் போடவே அவரது தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆரூண் மற்றும் ஆனந்தைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்தனர்.
இதில் படுகாயமடைந்த ஆரூண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்த் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து எழில்மதியின் தந்தை உட்பட கிராம மக்கள் சிலர் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications