சோமாலியா: கடத்தப்பட்ட இந்திய கப்பல்-14 ஊழியர்கள் மீட்பு
டெல்லி: சோமாலியாவில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்திய கப்பல், இந்திய மற்றும் பிரான்ஸ் கடற்படைகளின் கூட்டு முயற்சியால் அதிலிருந்த 14 இந்திய பணியாளர்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் பதிவு செய்யப்பட்ட எம் வி நபேயா என்ற இந்திய கப்பல் சோமாலியா துறைமுகத்தில் சரக்குகளை இறக்கி விட்டு துபாய் நோக்கி திரும்பி கொண்டிருந்த போது இம்மாதம் 10-ம் தேதி 7 ஆயுதம் எந்திய கடற்கொள்ளையர்களால் சோமாலியாவின் பூசாசோ கடற்பகுதியில் கடத்தப்பட்டது.
அதனை கடற்கொள்ளையாளர்கள் பாப் எல் மான்டே என்ற இடத்திற்கு இழுத்து சென்று கடந்த 13-ம் தேதி லைபீரிய கப்பல் ஒன்றையும் கடத்த முயன்றனர்.
ஆனால் அப்பகுதியில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய கடற்படைக்கு சொந்தமான பிரான்ஸ் போர்க்கப்பல் கடற்கொள்ளையர்களின் அந்த முயற்சியை முறியடித்தது.
இதனையடுத்து கடத்தப்பட்ட இந்திய கப்பலை பிரான்ஸ் போர்க் கப்பல் கண்காணித்து வந்ததுடன் கடற்கொள்ளைக்கு எதிரான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை கப்பலுக்கு தொடர்ந்து தகவலை பரிமாறியும் வந்தது.
இந்திய மற்றும் பிரான்ஸ் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கடந்த கடற்கொள்ளையர்கள் இவ்விரண்டு கடற்படை கப்பல்களும் இணைந்து கூட்டு அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் இறங்கக்கூடும் என்று அஞ்சி கடத்தப்பட்ட இந்திய கப்பலை சோமாலி கடற்பகுதிக்கு இழுத்து சென்று அதிலிருந்த இந்திய பணியாளர்களின் ரொக்கம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கடற்கொள்ளையர்கள் அதனை விட்டு விட்டு சென்றுவிட்டனர்.
அதன் பின்னர் அந்தக் கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள் இந்திய போர்க்கப்பலை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.
இத்தகவலின் பேரில் இந்திய போர்க்கப்பல் பிரான்ஸ் போர்க்கப்பலுடன் ஒருங்கிணைந்து அந்த கப்பலை மீட்டது. அதிலிருந்த 14 இந்திய பணியாளர்களும் பத்திரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் மற்றும் மருந்துப் பொருட்களை இந்திய போர்க்கப்பல் வழங்கியது. தற்போது அந்த கப்பல் ஏமன் நாட்டின் அல்முக்கல்லா என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
இந்திய மற்றும் பிரான்ஸ் போர்க்கப்பலின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்ட இந்திய கப்பல் அதிலிருந்த பணியாளர்களுடன் கடற்கொள்ளையர்களுக்கு எந்தவித பிணைத் தொகையும் வழங்கப்படாமல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ












Click it and Unblock the Notifications