சீன, பாக் ஆயுத இறக்குமதி: ரத்து செய்த இலங்கை
கொழும்பு: சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் முடிவை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது.
ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று இன்று கூட்டுப் படைத் தலைவராக பதவியேற்றுள்ள சரத் பொன்சேகா இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
பதவியேற்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஈழப் போர் முடிவடைந்து விட்டதால், பாகிஸ்தான், சீனாவிடமிருந்து 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் முடிவு ரத்து செய்யப்படுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டதால் கனரக ஆயுதங்கள் இனி தேவைப்படாது என்பதால் சீன ஆயுதக் கொள்முதல் ரத்து செய்யப்படுகிறது.
2009ம் ஆண்டு பாதுகாப்பு செலவீனமாக 200 பில்லியன் திட்டமிடப்பட்டது. இது நாட்டின் மொத்த செலவீனத்தி்ல 17 சதவீதமாகும்.
3.50 லட்சம் பேரைக் கொண்ட இலங்கை ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டு செயல்பாட்டால், ஆசியாவின் மிக நீண்ட போர்களில் ஒன்று மே 19ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
கருணா தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் 800 வீரர்கள் ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
500 இந்திய வீரர்கள் வருகை...
மேலும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 500 பேரைக் கொண்ட இந்திய ராணுவக் குழு வரவுள்ளதாகவும் பொன்சேகா கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படையினர் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பணி இலகுவானது ஒன்றல்ல. இதற்கு நீண்டகாலம் எடுக்கும்.
இந்தப் பணியில் எங்களுக்கு உதவுவதற்கு இந்தியப் ராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த 500 பேர் இங்கு வரவுள்ளனர்.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு இந்தியப் படையினரின் உதவிகள் அவசியமானவை.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அரச சார்பற்ற அமைப்புக்கள் செய்ததைவிட அரசுப் படையினர் பத்து மடங்கு அதிகமாகச் செய்துள்ளனர். தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதால் படையில் உள்ள அனைத்து கண்ணிவெடி அகற்றும் பிரிவினரும் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications