தமிழகத்தில் 3 மது, போதை மறுவாழ்வு மையங்கள்
டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்காக மூன்று ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை இணை அமைச்சர் நெப்போலியன் லோக்சபாவில் இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்தை தடுப்பதற்கான மத்திய திட்டத்தின் கீழ் இந்த மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
மது மற்றும் போதை அடிமைகளுக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களை அமைக்கவும் இதர போதைப் பழக்கங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவும் உள்ளாட்சி அமைப்புகளும் மத்திய நிதியுதவி பெறுவதற்கு தகுதி வாய்ந்தவை.
தமிழ்நாட்டுக்கு 2006-09-ம் ஆண்டுகளில் மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் தடுக்கும் திட்டத்தின் கீழ் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.389.53 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும், 2009-10-ம் ஆண்டுக்கு இதற்காக ரூ.230 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நெப்போலியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications