தமிழக ரயில்கள், ரயில் நிலையங்களுக்கு தீவிரவாதிகள் குறி
சென்டிரல் நிலையம், எழும்பூர் தவிர தாம்பரம், மாம்பலம், கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ரயில்கள் நிறுத்தப்படும் யார்டுகள், பிளாட்பாரங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய ரயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடக்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன.
இது தவிர லாட்ஜ்கள், ஹோட்டல்கள், விடுதிகளி்ல் தங்கியிருப்போர் குறித்தும் விசாரணை நடக்கிறது.
மேலும் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் காம்ளக்ஸ்கள், திரையரங்குகள், அடுக்குமாடி கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.