For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ரயில்கள், ரயில் நிலையங்களுக்கு தீவிரவாதிகள் குறி

By Staff
Google Oneindia Tamil News

Terrorist
சென்னை: தமிழகத்தில் ரயில்கள், முக்கிய ரயில் நிலையங்கள், யார்டுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை அனுப்பியதையடு்த்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்டிரல் நிலையம், எழும்பூர் தவிர தாம்பரம், மாம்பலம், கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், ரயில்கள் நிறுத்தப்படும் யார்டுகள், பிளாட்பாரங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய ரயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடக்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன.

இது தவிர லாட்ஜ்கள், ஹோட்டல்கள், விடுதிகளி்ல் தங்கியிருப்போர் குறித்தும் விசாரணை நடக்கிறது.

மேலும் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் காம்ளக்ஸ்கள், திரையரங்குகள், அடுக்குமாடி கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X